தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 11-06-2022 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணத்திற்கு அருகில் உள்ள KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் இலவசமாகும். மேலும் தகவலுக்கு 04362237037 இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, தாராசுரம், கும்பகோணம்_612702. Landmark: https://maps.app.goo.gl/UsLWz2kue44wvU6M7
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|